
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில், மு.வீரபாண்டியன் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், 2018 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்தவர். விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சமூக நீதி போராட்டங்களில் முக்கிய பங்காற்றியவர். மேலும், இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.