
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. தகுதியான வாக்காளர்களை நீக்கி உள்ளதாகவும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சிகள், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடுத்துள்ளன.