
மும்பை: நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கு எதிராக மகாராஷ்டிரா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மும்பையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, “நாளை திட்டமிடப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிப்பது பயங்கரவாதம் குறித்த நமது நிலைப்பாட்டை உலகிற்கு தெரிவிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.