
சென்னை: தமிழகத்தில் நாசவேலை செய்ய உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர் ஏற்கெனவே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் சிலர், பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்பவரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.