• September 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை​யின் பல்​வேறு இடங்​களில் தொடர்ந்து 5-வது நாளாக உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்த தூய்மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் தேடி, தேடி கைது செய்து வரு​கின்​றனர். சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​யை, தனி​யார் நிறு​வனத்​திடம் மாநக​ராட்சி ஒப்​படைத்​துள்​ளதைக் கண்​டித்​தும், தங்​களை பணி நிரந்​தரம் செய்​யக் கோரி​யும் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 13 நாட்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் கைது செய்​யப்​பட்டு அப்​புறப்​படுத்​தப்​பட்​டனர். இதையடுத்து செப்​.4-ம் தேதி சிந்​தா​திரிப்​பேட்டை மே தினப் பூங்​கா​வில் திடீரென ஒன்று கூடிய 300-க்​கும் மேற்​பட்ட தூய்​மைப் பணி​யாளர்​களை போலீ​ஸார் உடனடி​யாக கைது செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *