
ஹைதராபாத்: நகைகளை கொள்ளையடிக்க 2 வேலையாட்கள் தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை குக்கரால் அடித்து கொலையும் செய்தனர். ஹைதராபாத் போலீஸார் 5 குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத் கூகட்பல்லியில் உள்ள ஒரு கேட்டட் கம்யூனிட்டி (தொகுப்பு வீடுகள்) பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி ரேணு அகர்வால். பல ஆண்டுகளாக ஹைதராபாத்தில் இவர்கள் உருக்கு வணிகம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமான ஒரு மகளும், கல்லூரியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர்.