
சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் அப்பாவு பேசியதாவது: அமைதி, வளம், வளர்ச்சி ஆகிய மூன்றும் இருந்தால்தான், மாநிலங்கள் சிறப்பாக இருக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் ஆரோக்கியமானதாக இருப்பதற்காக கடந்த காலங்களில் ராஜமன்னார், சர்க்காரியா, வெங்கடாசலய்யா, புஞ்சி தலைமையிலான குழுக்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளன.