
சென்னை: கோவையில் நிலம் வாங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் கோவை காளபட்டியில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் 11 ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார்.
இது விவாதப்பொருளான நிலையில், அவர் வெளியிட்ட விளக்க அறிக்கை: எனது அரசியல் வேலைகளுக்கு அப்பாற்பட்டு சமுதாய நலனுக்காகவும், இயற்கை விவசாய நலனுக்காகவும், நான் செய்து வரும் பணிகள் குறித்து சிலர் வதந்தி பரப்பி வருவதாக எனது கவனத்துக்கு வந்தது. கடந்த ஜூலை 12-ம் தேதி விவசாய நிலம் வாங்கியது உண்மைதான்.