• September 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​வலது​சாரி தலை​வர்​கள் சிலரை ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் கொல்ல திட்​ட​மிட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்துள்ளது. பாகிஸ்​தானுடன் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் சிலர் இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டு​வ​தாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து டெல்​லி, ம.பி., ஜார்க்​கண்ட் மற்​றும் தெலங்​கா​னா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 5 பேரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இவர்​களில் மும்​பையை சேர்ந்த அஃப்​தாப், அபு சூபி​யான் ஆகிய இரு​வரை டெல்லி நிஜா​முதீன் ரயில் நிலை​யத்​தில் கடந்த 9-ம் தேதி ஆயுதங்​களு​டன் கைது செய்​தனர். பிறகு ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் அஷார் டேனிஸ், ம.பி.​யின் ராஜ்கர் நகரில் கம்​ரான் குரேஷி, தெலங்​கா​னா​வில் ஹசைஃப் ஏமன் ஆகியோரை கைது செய்​தனர். இவர்​களிடம் டெல்லி போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *