
சென்னை: தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சிறிய ஜவுளி கடையாக தொடங்கப்பட்டு, தற்போது தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகளைத் தொடங்கி பிரபலமானது.
சென்னை தி.நகர் நாகேஷ்வரராவ் சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, ஜி.என்.செட்டி தெருவில் உள்ள ஜவுளிக் கடை, தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள கடை, குரோம் பேட்டையில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான நகை கடையிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.