• September 13, 2025
  • NewsEditor
  • 0

மருந்தக குடோனில் வேலை பார்க்கும் மணிக்கு (ஜி.வி.பிரகாஷ்), மருந்தகம் ஒன்றில் பணியாற்றும் ரேகா (தேஜு அஸ்வினி) மீது காதல். மருந்து கொண்டு செல்லும் மணியின் வாகனம் ஒரு நாள் திருட்டுப் போகிறது. அதற்குள் முக்கியமான பொருள் இருப்பதாகச் சொல்லும் உரிமையாளர், ரேகாவை கடத்தி வைத்துக் கொண்டு, பொருளைக் கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டு அவரை மீட்குமாறு பிளாக்மெயில் செய்கிறார்.

இதற்கிடையே தொழிலதிபர் அசோக்கின் குழந்தை காணாமல் போகிறது. அவரிடம் ஒரு கும்பல், பணம் கேட்டு பிளாக்மெயில் செய்கிறது. அசோக்கின் மனைவியிடம் அவர் முன்னாள் காதலன், வேறு விதத்தில் பிளாக்மெயில் செய்கிறான். இந்தச் சம்பவங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இதை செய்கிறார்கள்? குழந்தை மீட்கப்பட்டதா? என்பது கதை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *