• September 13, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அரிய​வகை மூளைக்​கசிவு நோயால் பாதிக்​கப்​பட்ட 7 வயது சிறு​வனுக்கு மண்டை ஓட்டை திறந்து அரசு மருத்​து​வர்​கள் வெற்​றிகர​மாக அறுவை சிகிச்சை செய்​துள்​ளனர்.

இதுகுறித்து விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை டீன் ஜெயசிங் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வத்​தி​ரா​யிருப்பு செம்​பட்​டியைச் சேர்ந்த மணி​கண்​டன் என்​பவரின் மகன் பாலபிர​சாத்​(7). கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி விருதுநகர் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3-வது முறை​யாக மூளைக் காய்ச்​சலால் பாதிக்​கப்​பட்டு உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *