
புதுடெல்லி: பட்டாசுக்கு டெல்லியில் விதிக்கப்பட்டதடையை ஏன் நாடு முழுவதும் நீட்டிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
‘பேரியம் நைட்ரேட் போன்ற வேதிப் பொருட்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்’ என்று கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.