
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தியாகி இமானுவேல் சேகரனின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அங்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலில் இமானுவேல் சேகரன் குடும்பத்தினரான அவரது மகள் சுந்தரி பிரபாராணி, பேரன்கள் சக்கரவர்த்தி, ஆரோக்கிய கோமன், ஜீவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.