
மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது நோயாளி சந்திராவை அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தார். அப்போது பழனிசாமி, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்கமாக மிரட்டினார்.