
சென்னை: ‘அதிமுகவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள விசிக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சுற்றுப் பயணம் செல்வதில் விசிகவுக்கு அவசரம் எதுவும் இல்லை. கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு, சுற்றுப் பயணம் செல்வது குறித்து முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்போம்.