
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஜூனாகத் நகருக்கு வருகை தந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) மணிப்பூர் செல்ல உள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மணிப்பூரில் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. அவர் இப்போது அங்கு செல்வது நல்லது. ஆனால், நாட்டின் முக்கிய பிரச்சினை வாக்கு திருட்டுதான். ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன. தற்போது எல்லா இடங்களிலும் மக்கள் ‘வாக்கு திருட்டு’ பற்றித்தான் பேசுகிறார்கள்” என கூறினார்.