
சென்னை: தேர்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால், ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து, வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானா தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அசன் மவுலானா போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இதுசம்பந்தமாக 10 நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.