
மதுரை: பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற பொது மக்களை வாடகை அடிப்படையில் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதில் ரூ.5 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நாட்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு கடந்த ஆண்டு வரை 1 கி.மீ-க்கு ரூ.40 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.