• September 12, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று (செப். 12) பதவியேற்க உள்ளார்.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக கடந்த ஜூலை 21-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அப்பதவிக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (67) அபார வெற்றி பெற்றார். இவர், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *