
புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் விடுதியில் மதம் மாற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதில் விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட பல்வேறு வகுப்பினர் என சுமார் 60 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மதம் மாறுவதற்கு தூண்டப்பட்டு ஏமாற்றப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆல்வாரின் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மிஷினரியின் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு தினமும் அனுப்பாததால், அக்குழந்தைகள் விடுதியிலேயே அதிக நாட்கள் தங்கி உள்ளனர். அவர்களுக்கான உணவு உட்பட அனைத்து செலவுகளையும் கிறிஸ்தவ மிஷனரிகள் செய்துள்ளனர். பின்னர் குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும் மதம் மாற்ற முயற்சித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.