
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை: திருவேற்காடு, வீரராகவ புரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமைகளில் 300-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களும், மற்ற நாட்களில் 200-க்கும் மேற்பட்டோரும் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனை ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களும் எளிதாக வந்து மருத்துவம் பெற வாய்ப்பாக அமைந்திருந்தது.