• September 12, 2025
  • NewsEditor
  • 0

டேராடூன்: வெள்​ளம், நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்ட உத்​த​ராகண்ட் மாநிலத்​துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்​கப்​படும் என்று பிரதமர் மோடி அறி​வித்​துள்​ளார். உத்​த​ராகண்​டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்​வேறு இடங்​களில் மேகவெடிப்பு காரண​மாக பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக கங்​கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழு​மை​யாக வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

தொடர் மழை​யால் உத்​த​ராகண்ட் முழு​வதும் மோச​மாக பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை வாராணசி​யில் இருந்து உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனுக்கு விமானத்​தில் சென்​றார். அங்கு மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி உள்​ளிட்​டோருடன் வெள்​ளம், நிலச்​சரிவு பாதிப்​பு​கள் குறித்து அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *