• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் மூளைச்​சாவு அடைந்து உடலுறுப்பு தானம் செய்​தவர்​களின் பெயர்​கள் பதி​யப்​பட்ட ‘மதிப்​புச்​சுவர்’ வரும் 30-ம் தேதி திறக்​கப்​படு​கிறது. சென்னை சைதாப்​பேட்டை சட்​டப்​பேரவை தொகு​தி, கோடம்​பாக்​கம் மண்​டலம், வார்டு 139, மேற்கு ஜோன்ஸ் சாலை​யில் உள்ள மயானத்​தின் மேம்​பாட்​டுப் பணி​களை சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

அப்​போது அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள அனைத்து மயானக் கூடங்​கள், குறிப்​பாக எரி​வாயு தகன மேடைகளை சீர்​படுத்தி மேம்​படுத்​தும் பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *