
பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகேயுள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் மூலவராக மூகாம்பிகை அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய 3 தெய்வங்களின் அம்சமாக கருதப்படுகிறார். கொல்லூர் மூகாம்பிகையை வணங்கியதால் தனது வாழ்வில் அதிசயங்கள் நிகழ்ந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா பல முறை தெரிவித்துள்ளார்.
அவர் அடிக்கடி அங்கு சென்று மூகாம்பிகையை வழிபட்டுள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா நேற்றுமுன் தினம் தனது மகன் கார்த்திக் ராஜா, அவரது பேரன் யத்தீஸ்வர் ஆகியோருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயி லுக்கு வந்தார். அப்போது அம்மனுக்கு 2 வைர கிரீடங்கள், வைர நெக்லஸ், வீரபத்ர தேவர் சுவாமிக்கு தங்க வாள், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.