• September 12, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் உடுப்பி மாவட்​டம் பைந்​தூர் அரு​கே​யுள்ள கொல்​லூர் மூகாம்​பிகை அம்​மன் கோயில் மிக​வும் பிரசித்தி பெற்​றது. இக்​கோயி​லின் மூல​வ​ராக  மூகாம்​பிகை அம்​மன் சரஸ்​வ​தி, லட்​சுமி, பார்​வதி ஆகிய 3 தெய்​வங்​களின் அம்​ச​மாக கருதப்​படு​கிறார். கொல்​லூர் மூகாம்​பிகையை வணங்​கிய​தால் தனது வாழ்​வில் அதிச​யங்​கள் நிகழ்ந்​த​தாக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா பல முறை தெரி​வித்​துள்​ளார்.

அவர் அடிக்​கடி அங்கு சென்று மூகாம்​பிகையை வழிபட்​டுள்​ளார். இந்​நிலை​யில் இசையமைப்​பாள​ரும் மாநிலங்​களவை உறுப்​பினரு​மான இளை​ய​ராஜா நேற்​று​முன் தினம் தனது மகன் கார்த்​திக் ராஜா, அவரது பேரன் யத்​தீஸ்​வர் ஆகியோ​ருடன் கொல்​லூர் மூகாம்​பிகை கோயி லுக்கு வந்​தார். அப்​போது அம்​மனுக்கு 2 வைர கிரீடங்​கள், வைர நெக்​லஸ், வீரபத்ர தேவர் சுவாமிக்கு தங்க வாள், வெள்ளி கிரீடம் ஆகிய​வற்றை காணிக்​கை​யாக வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *