
புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அறிவுறுத்தலின்படி இந்தியாவில் தீவிவராத தாக்குதல் நடத்தி சதி செய்த 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்து வெடிகுண்டு மூலப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சிலர் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டுவதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் டெல்லி போலீஸ் சிறப்பு படையினர், கடந்த 6 மாதங்களாக தீவிர கண்
காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.