
யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்காகவே ஸ்பெஷலாக வேலூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. அந்தளவுக்கு மோடியிடமும் அமித் ஷாவிடவும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர்.
எம்ஜிஆர் இருந்தபோது 1980-ல் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன ஏ.சி.சண்முகம் தொடர்ந்து, 1984-ல் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். அத்துடன் அவரது வெற்றிக் கணக்கு நின்றுவிட்டது. 2001-ல் ஆரணியில் போட்டியிட்டு தோற்றவர், 2014-ல் வேலூர் மக்களவை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார்.