
சென்னை: கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயதுக்குமேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளுக்கே சென்று, செப்டம்பர் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட பொருட்கள் வரும்13 முதல் 16-ம் தேதிவரை விநியோகிக்கப்பட உள்ளன. சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளின் அறிவிப்புப் பலகையிலிருந்து விநியோகத் தேதியை அறிந்துகொள்ளலாம்.
இதில் செப்.13, 14, 15 ஆகிய 3 நாட்களில்மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளிலும், செப்.13 முதல் 16 வரை 4 நாட்களும் திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர். அண்ணா நகர்மற்றும் ஆலந்தூர் பகுதிகளிலும் வீடுவீடாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.