
காஞ்சிபுரம்: தமக்கு சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்ட வழக்கில் நடிகை கவுதமி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். நடிகை கவுதமி, அவரது அண்ணன் காந்த் ஆகியோருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ளது.
இந்த நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015-ம் ஆண்டு தன்னிடம் மேலாளராக இருந்த அழகப்பனுக்கு சுங்குவார் சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் உரிமை கொடுத்துள்ளார்.