
சென்னை: தமிழகத்தில் 4 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், எச்ஐவி – எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த தீவிர விழிப் புணர்வு பிரச்சாரத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.