• September 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கல்​லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்​கில் திமுக பிர​முகரின் பேரனுக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்​ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்​சாய் என்ற கல்​லூரி மாணவரை, கார் ஏற்றி கொலை செய்​த​தாக திமுக பிர​முகரும், சென்னை மாநக​ராட்சி மண்டல தலை​வரு​மான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்​துரு கைது செய்​யப்​பட்​டார்.

கல்​லூரி மாணவ​ரான அவருக்கு ஜாமீன் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் 2 முறை தள்ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், அவருக்கு ஜாமீன் கோரி மீண்​டும் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு, நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது சந்​துரு தரப்​பில், “காரில் சந்​துரு சென்​றாரே தவிர, காரை அவர் ஓட்​ட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *