
சென்னை: கல்லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகரின் பேரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்சாய் என்ற கல்லூரி மாணவரை, கார் ஏற்றி கொலை செய்ததாக திமுக பிரமுகரும், சென்னை மாநகராட்சி மண்டல தலைவருமான கே.கே.நகர் தனசேகரனின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவரான அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அவருக்கு ஜாமீன் கோரி மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சந்துரு தரப்பில், “காரில் சந்துரு சென்றாரே தவிர, காரை அவர் ஓட்டவில்லை.