
தமிழக அரசு சாதிய படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார்.
சாதிய படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றக் கோரி பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலர் க.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் கே. ஜி.பாஸ்கரன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் பேசியதாவது: சாதிய ஒடுக்குமுறை, சாதிய கவுரவம் என்ற பெயரில் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் கொடுமைகள் நடக்கின்றன.