• September 11, 2025
  • NewsEditor
  • 0

பொள்ளாச்சி/ கோவை: திமுகதான் ஐசியூ-வில் உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வால்பாறை தொகுதிக்குட்பட்ட, ஆனைமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 52 மாத ஆட்சியில், வால்பாறை சட்டப் பேரவை தொகுதிக்கு ஏதாவது புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டு கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *