
சொத்து வரி முறைகேட்டு புகாரில் கணவர் சிறை சென்றதால் மேயர் இந்திராணியுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தவிர்த்து வருகிறார்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உள்பட 23 பேர் இதுவரை கைது செய்யப் பட்டுள்ளனர். பொன் வசந்த் முன்னாள் சபாநாயகர் பழனிவேல் ராஜன் மற்றும் தற்போது அவரது மகனும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதற்கு பரிசாகத்தான், பொன் வசந்த் மனைவி இந்திராணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேயராக்கினார்.