
மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வது அவரது கட்சியின் முடிவு.