
சென்னை: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை அடையாறு காந்தி நகரை சேர்ந்தவர் இந்திரா. மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை இவரது வீட்டுக்கு 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்தனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை புகார் தொடர்பாக, அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.