• September 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு சுந்​திரம் அடைந்த பிறகு 1952-ல் நாட்​டின் முதல் குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் சோவி​யத் ஒன்​றி​யத்​தின் தூத​ராக இருந்த தமிழ​ரான சர்​வபள்ளி ராதாகிருஷ்ணன் போட்​டி​யின்றி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். 1957-ல் இரண்​டாவது முறை​யாக இப்​ப​தவிக்கு போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்ட அவர், 1962-ல் குடியரசுத் தலை​வர் பதவியை​யும் அடைந்​தார்.

1962-ல் நடந்த குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் பிஹார் ஆளுநர் ஜாகிர் உசேன் காங்​கிரஸ் வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்​டு வெற்றி பெற்றார். சர்​வபள்ளி ராதாகிருஷ்ணனை போலவே ஜாகிர் உசேனும் தொடர்ந்து 1967-ல் குடியரசுத் தலை​வ​ரா​னார். இது​வரை எவரும் பெறாத வகை​யில் மூன்று வெவ்​வேறு பிரதமர்​களின் ஆட்​சி​யில் குடியரசு துணைத் தலை​வர் பதவி வகிக்​கும் வாய்ப்பு பி.டி.ஜாட்​டிக்கு கிடைத்​தது. இந்​திரா காந்​தி, மொரார்ஜி தேசாய், சவுத்ரி சரண் சிங் ஆகியோர் ஆட்​சி​யில் அவர் இப்​ப​தவி வகித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *