
புதுடெல்லி: நகரங்களில் கட்டிடங்கள் அதிகரிக்கும் அளவை செயற்கைக்கோள் படங்களை கொண்டு கணக்கிட்டு ‘ஸ்கொயர் யார்ட்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் இணையதளம் ஒன்று ‘சிட்டிஸ் இன் மோஷன்’ என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய நகரங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நகர்ப்புற எல்லை பல திசைகளில் விரிவடைந்து, தற்போது நகர்ப்புற வளர்ச்சியில் நாட்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.