
சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தற்போது வரை 80 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலூர்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 17 நிலையங்களில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.