
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கார்வார்- அங்கோலா சட்டபேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் கிருஷ்ணா மீது கடந்த 2010-ம் ஆண்டில் 1.25 லட்சம் டன் இரும்புத் தாது சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து அபராதம் விதித்தது.
இதையடுத்து சதீஷ் கிருஷ்ணா மீது அமலாக்கத்துறை கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில், சதீஷ் கிருஷ்ணா வருமான ம‌ற்றும் துறைமுக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ரூ.86.78 கோடி மதிப்பிலான இரும்பு தாதுக்களை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தது தெரியவந்தது.