
புதுடெல்லி: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் மானசரோவர் அமைந்துள்ளது. இதனால் அங்கு செல்வதற்கு சீன அரசின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே மோதல் ஏற்பட்டதால் கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இந்த யாத்திரை தொடங்கியது.
மானசரோவருக்கு லிபுலேக் கணவாய் (உத்தராகண்ட்), நாது லா கணவாய் (சிக்கிம்), காத்மாண்டு (நேபாளம்) ஆகிய 3 வழிகளில் செல்ல முடியும். இந்நிலையில், சுமார் 750 பக்தர்கள் அரசு முகமைகள் மூலம் கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் காத்மாண்டு வழியாக சென்றனர்.