• September 11, 2025
  • NewsEditor
  • 0

பொள்ளாச்சி: ‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மாலை பேசினார். கட்சியினர் அளித்த வரவேற்பைப் தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. தொழில் முதலீடு செய்ய சென்றுள்ளார். இதுவரை 5 முறை ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *