
மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11,275 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 15,800 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 11,275 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவும் நேற்று காலை முதல் விநாடிக்கு 16,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர்மின் நிலையங்கள் வழியாக 13,000 கனஅடியும், 16 கண் மதகுகள் வழியாக 2,000 கனஅடியும் திறக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர பழுது நேற்று மாலை சரி செய்யப்பட்டதால் 16 கண்மதகுகள் வழியாக நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. பின்னர், நீர்மின் நிலையம் வழியாக 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.