
மதுரை: நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் சிறுநீரகங்கள் பழுதானதால், மாற்று சிறுநீரகங்கள் பொருத்த அனுமதி கோரி பல மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்தேன். எனினும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான குழு இதுவரை அனுமதி வழங்கவில்லை.