• September 11, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: இலங்​கை​யில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடி துறை​முகத்தை இந்​திய அரசு உதவி​யுடன் மேம்​படுத்த அந்​நாட்டு அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது. யாழ்ப்​பாணத்​தில் உள்ள பருத்​தித்​துறை மீன்​பிடித் துறை​முகம், இலங்​கை​யின் பிபகு​தி​களை இணைக்​கும் முக்​கிய இடமாக உள்​ளது. இந்​தி​யா​வுக்கு மிக அரு​கில், ராமேசுவரம் மற்​றும் வேதா​ரண்​யத்​திலிருந்து 40 கடல் மைல் தொலை​வில் உள்​ளது.

இலங்​கை​யில் நடை​பெற்ற உள்​நாட்​டுப் போரின்​போது விடு​தலைப் புலிகளின் கப்​பல் படையை வீழ்த்​து​வதற்​காக, அந்​நாட்டு ராணுவம் நடத்​திய தாக்​குதல்​களில் பருத்​தித்​துறை துறை​முகம் சேதமடைந்​தது. 1995-ல் விடு​தலைப் புலிகளிடம் இருந்து இந்த துறை​முகம் இலங்கை ராணுவத்​தால் கைப்​பற்​றப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *