
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ‘காவலர் நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் டிஜிபி, காவல் ஆணையர் உள்பட சுமார் 3 ஆயிரம் போலீஸார் பங்கேற்றனர்.
இந்தாண்டு ஏப்ரல் 29-ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில், முதல்வர் பேசும்போது, “முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப். 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.