
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பல்வேறு அமைப்பினர் அளித்த கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தனியார் தங்கும் விடுதி அரங்கில் நடைபெற்ற பல்வேறு விவசாய, தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.