
சென்னை: சென்னையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிசாமி தலைமை வகித்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.