• September 10, 2025
  • NewsEditor
  • 0

“திமுக-விடம் இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்” என்கிறார் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். அதேசமயம், மீண்டும் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியைக் கேட்டுப் பெற அதிக முனைப்புக் காட்டி வருகிறது சிபிஎம். அதேபோல், தங்களுக்குச் சாதகமான புதுக்கோட்டை அல்லது ஆலங்குடி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அழுத்தமாக இருக்கிறது சிபிஐ. இதில் சிக்கல் என்னவென்றால் ஆலங்குடி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் தொகுதி.

புதுக்​கோட்டை மாவட்​டத்​தில் உள்ள 6 தொகு​தி​களிலும் இடது​சாரி சிந்​தனை​யாளர்​கள் விரவி இருக்​கி​றார்​கள். இங்​குள்ள புதுக்​கோட்​டை, ஆலங்​குடி தொகு​தி​களை ஏற்​கெனவே சிபிஐ வென்​றுள்​ளது. அதே​போல், கடந்த தேர்​தலில் கந்​தவர்​வக்​கோட்​டையை சிபிஎம் கைப்​பற்றி உள்​ளது. சொல்​லப்​போ​னால், கடந்த முறை கந்​தவக்​கோட்​டையை சிபிஎம் கேட்​கவே இல்​லை. கடைசி நேரத்​தில் தான் இந்​தத் தொகு​தியை சிபிஎம்​-​முக்கு டிக் அடித்​தது திமுக. இதையடுத்​து, முன்பு மக்​கள் நலக் கூட்​ட​ணி​யில் இங்கு போட்​டி​யிட்ட சின்​னதுரையையே வேட்​பாள​ராக நிறுத்​தி​யது சிபிஎம். அவரை ஜெயிக்க வைத்​தது திமுக.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *