
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழக பாஜக அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது தலைமை தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவித்து, மகிமைப்படுத்தும்.